தமிழ்நாடு செய்திகள்

சமூகவலைதளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு வெளியிட்ட பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கைது

Published On 2023-11-23 09:51 IST   |   Update On 2023-11-23 09:52:00 IST
  • சாத்தான்குளம் தி.மு.க. நகர துணை செயலாளர் வெள்ளபாண்டியன் என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.
  • 4 பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தனர்.

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் ராஜதுரை (வயது47). பா.ஜ.க. முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகி.

இந்நிலையில் அவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாத்தான்குளம் தி.மு.க. நகர துணை செயலாளர் வெள்ளபாண்டியன் (73) என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தனர்.

Tags:    

Similar News