தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய பேக்கரி சூப்பர்வைசர்- போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

Published On 2023-03-27 10:27 GMT   |   Update On 2023-03-27 10:27 GMT
  • புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
  • தன்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்புகார் அளித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் குமரபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது32).

இவர் அன்னூரில் உள்ள பேக்கரியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், பா.ஜ.கவை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.க தலைவர் உமாசங்கர் ஆகியோர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விஸ்வநாதன், தன்னை பா.ஜ.கவில் சேர்த்து கொண்டு கட்சி பொறுப்பு வழங்குமாறு, பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.க தலைவர் உமாசங்கரிடம் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் இவரின் நடவடிக்கை பிடிக்காததால் கட்சியில் சேர்த்து கொள்ள இவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இருப்பினும் விஸ்வநாதன் இவர்களை சந்தித்து தொடர்ந்து தன்னை பா.ஜ.கவில் சேர்க்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சேர்த்து கொள்ளவே இல்லை.

இதனால் அவர்கள் இருவரையும் பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஸ்வநாதன் அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தானே தீ பற்ற வைத்து கொண்டு, காழ்புணர்ச்சி காரணமாக பா.ஜ.கவை சேர்ந்த சதீஷ்குமார், உமாசங்கர் ஆகியோர் தன்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்புகார் அளித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags:    

Similar News