தமிழ்நாடு

அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார தினம் - எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

Published On 2024-03-02 16:21 GMT   |   Update On 2024-03-02 16:21 GMT
  • இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது.
  • 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது.

இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19-ம் தேதி இரவு அய்யாவழி மக்கள், அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதாரக் காட்சியை கண்டு அருள் பெறுவார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள், அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்ச்சியிலும், பிறகு சாமிதோப்பு தலைமைபதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அய்யா வைகுண்டர் அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள்.

கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில், அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளைப் பெறுவதற்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News