ரேஷன் கடைகளில் பொங்கல் ரொக்க பரிசு வழங்குவதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
- கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
- பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, செங்கல்பட்டு வண்டலூர் வட்டங்கள் மற்றும் காட்டாங்கொளத்தூர் வட்டாரத்துக்கு செங்கல்பட்டு சார் ஆட்சியர் (9445000414) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் வட்டாரத்துக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் (9445000415), செய்யூர் வட்டம், சித்தாமூர் வட்டாரத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (99447 25575), செய்யூர் வட்டம் இலத்தூர் வட்டாரத்துக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (9725307555), திருக்கழுங்குன்றம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (9500959938), திருப்போரூர் வட்டத்துக்கு கலால் உதவி ஆணையர் (9444939212) ஆகியோர் சிறப்பு கண் காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசுகளை வழங்கும் போது, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும்.
இது தவிர பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427414, 27427412 ஆகிய எண்களிலும், வட்டங்கள் வாரியாக புகார்களை தெரிவிக்க செங்கல்பட்டு வட்டம்-8637616667, மதுராந்தகம்-82482 12994, செய்யூர்-9597373617, திருக்கழுக்குன்றம்- 9940624877, திருப்போரூர்- 99443 36339, வண்டலூர்- 7708931572 கட்டணமில்லா தொலைபேசி எண். 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வருகிற 9-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்பந்தப்பட்ட தகவல், புகார் ஏதேனும் இருப்பின் அதனை 044-27238225, 9043046100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.