தமிழ்நாடு செய்திகள்

மாதவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர் பகுதிக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு: 30-ந்தேதி புழலில் இருந்து வினியோகம்

Published On 2023-08-28 13:33 IST   |   Update On 2023-08-28 13:33:00 IST
  • வருகிற 30-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
  • https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை:

மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி காலை 10 மணி வரை பரா மரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

எனவே, மாற்று ஏற்பா டாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதி களுக்கு புழல் குடிநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள், முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News