தமிழ்நாடு

ஆருத்ரா மோசடி வழக்கு- 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்கள் முடக்கம்

Published On 2024-03-17 10:13 GMT   |   Update On 2024-03-17 10:13 GMT
  • ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம்.
  • ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக, 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

7000 ஏஜெண்டுகளை கண்டறிந்து, மோசடி செய்யும் நோக்கில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த 500 ஏஜெண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

500 ஏஜெண்டுகளில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது.

ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News