தமிழ்நாடு செய்திகள்

புயல் எச்சரிக்கை- சென்னையில் 7 விமானங்கள் ரத்து

Published On 2022-12-09 15:05 IST   |   Update On 2022-12-09 15:05:00 IST
  • மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஆலந்தூர்:

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஜெட் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்த செய்யப்பட்டு இருக்கிறது.

இதேபோல் இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:50 மணிக்கு கடப்பாவிலிருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News