தமிழ்நாடு

கம்பம் அருகே பண்ணையில் பதுக்கிய 400 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

Published On 2024-03-22 06:41 GMT   |   Update On 2024-03-22 06:41 GMT
  • கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையான கம்பம் அருகே கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது அறிவுறுத்தலின் பேரில் கலால் சிறப்பு படை உதவி கலால் ஆய்வாளர் தாமஸ்ஜான், தலைமை நிர்வாக அதிகாரி மரியாஆல்பின் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில் ராஜாக்காடு, கச்சிரபாலம், சஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சி அப்பகுதியில் உள்ள ரிசார்ட்ஸ் மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பண்ணை வீட்டு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 17 லிட்டர் சாராயம், இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News