தமிழ்நாடு

சென்னையில் 2 வருடங்களில் 26,671 தெரு நாய்களுக்கு கருத்தடை

Published On 2023-09-23 07:53 GMT   |   Update On 2023-09-23 07:53 GMT
  • சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன.
  • கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது

சென்னை:

சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து சென்று கருத்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள், ஒரு டிரைவர் உள்ளனர். நாய்களை பிடிக்க 64 வலைகள் உள்ளன. சென்னையில் கடந்த 2 வருடங்களில் மொத்தம் 26,671 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 10,976 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News