தமிழ்நாடு செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

Published On 2022-05-31 01:32 IST   |   Update On 2022-05-31 01:32:00 IST
நேற்று ஒரே நாளில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  

கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நேற்றிரவு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தமிழகத்தில் புதிதாக 12 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 89 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,55,376 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 74-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 493 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 44 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News