தமிழ்நாடு
ரெயில்

முதியோருக்கு ரெயில் கட்டண சலுகை ரத்து: செங்கை பத்மநாபன் கண்டனம்

Published On 2022-05-24 09:08 GMT   |   Update On 2022-05-24 09:08 GMT
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை:

நமது உரிமை காக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், 60 ஆண்டுகள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருந்த மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனா காலத்தில் இச்சலுகை ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டு ஆண்டுகளில் ரூ.3000 கோடி கூடுதல் வருவாய் ரெயில்வே துறைக்கு கிடைத்த காரணத்தால் இந்த ரத்து தொடரும் என்பது பொறுப்பற்ற அறிவிப்பு, இதனை மறுபரிசீலனை செய்து உடனடியாக சலுகை ரத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News