தமிழ்நாடு செய்திகள்
விதைப்பந்துகளை வீசிய வனத்துறை

எதிர்காலத்தில் யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையில் 1000 மூங்கில் விதைப்பந்துகளை வீசிய வனத்துறை

Published On 2022-05-24 10:42 IST   |   Update On 2022-05-24 10:47:00 IST
வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
நீலகிரி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் உணவு தேடி இடம் மாறிச் செல்கின்றன. உணவு கிடைக்காத சமயத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.

இதனை தடுக்கும் வகையிலும்  வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன்படி நேற்று கூடலூர் வனப்பகுதியில் 1000 மூங்கில் விதை பந்துகளை வீசினர்.

இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் மொத்தம் 10 ஆயிரம் மூங்கில் விதை பந்துகள் வீச முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1000 விதைப்பந்துகள் வீசப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் எதிர்காலத்தில் மூங்கில் காடுகள் பெருகி விடும். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள்ளும் வராது என்றனர்.

வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News