தமிழ்நாடு
ரெயில் நிலையத்தின் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்திருந்த முதியவரால் பரபரப்பு

ரெயில் நிலையத்தின் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்திருந்த முதியவரால் பரபரப்பு

Published On 2022-05-21 07:04 GMT   |   Update On 2022-05-21 07:04 GMT
புதுவை ரெயில் நிலையத்தில் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்திருந்த முதியவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

புதுவை ரெயில் நிலையத்தில் இன்று காலை 6 மணியளவில் 70 வயது முதியவர் ஒருவர் மின்சார ரெயிலை இயக்க அமைக்கப்பட்ட மின் கம்பத்தில் திடீரென ஏறி அமர்ந்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார் அந்த முதியவரை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த முதியவர் தொடர்ந்து மின் கம்பத்திலேயே அமர்ந்திருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், ஒதியஞ்சாலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் அந்த முதியவரை பாதுகாப்பாக மீட்டனர்.

இதையடுத்து அந்த முதியவரிடம் ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார். தனது பெயர் பாண்டுரங்கன், ஊர் விழுப்புரம் என்றும், மனைவி இறந்து விட்டதாகவும், தனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் போலீஸ் பணியில் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News