தமிழ்நாடு செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனினும் அவ்வப்போது இரவு நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தியது. மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, ட்ரான்ஸ்பார்மர் வெடித்தும் மரக்கிளைகள் விழுந்தும் மின் தடை ஏற்பட்டது.
குறிப்பாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அங்கு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
முகாசிபிடாரியூர் தியாகி குமரன் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இரவு நேரம் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். விடிய,விடிய தூங்காமல் அவதி அடைந்தனர். ஒரு சிலர் வாளி மூலம் மழை தண்ணீர் வெளியேற்றினர். பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.
சூறாவளி காற்று காரணமாக அரச்சலூர் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதேப்போல் சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இருந்த டவர் சூறாவளி காற்றுக்கு சரிந்து கீழே சாலையில் விழுந்தது.
நல்லவேளையாக அந்த நேரத்தில் யாரும் வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மின் ஊழியர்கள் சரிந்த மின்கம்பங்களை மீண்டும் சீரமைத்து வருகின்றனர்.
இதேபோல் அந்தியூர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் சூறாவளி காற்றுடன் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தவிட்டுப்பாளையம் கரட்டுப்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தது.
இதேபோல் அந்தியூர் காலனி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்தது. தங்க பாளையம் பகுதியில் மரகிளை மின்கம்பம் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதேப்போல் தங்கபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்தடை ஏற்பட்டது. இதனால் ஈச்சபாறை, வேதகாரன் குட்டை, அந்தியூர் காலனி, போன்ற பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு 10 மணிக்குப் பிறகு மழை நின்றவுடன் தவிட்டுபாளையம் அந்தியூர் டவுன் பகுதிகளில் மின் ஊழியர்கள் மின்தடையை சரி செய்தனர்.
மேலும் ஈச்சபாளையம் உட்பட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு மின் வினியோகம் வந்தது. இதனால் விடிய, விடிய மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.
இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, டி.என்.பாளையம் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பகலில் கடும் வெயில் வாட்டிய நிலையில் இரவு, 7 மணிக்கு மேல் மேகமூட்டம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்று வீசியது. 7.50 மணிக்கு மேல் கடும் புழுதி காற்றுடன், மின்னல், இடியுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில், 8 மணிக்கு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் பஸ் நிலையம், சத்தி சாலை, வீரப்பன்சத்திரத்தில் ஒரு பகுதி, மூலப்பட்டறை, அகில்மேடு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பழனி மலை வீதி போன்ற இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு ரெயில்வே நிலையம் எதிரே, ஒரு மின் கம்பம் காற்றால் சாய்ந்து, மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, எஸ்.கே.சி., சாலை, சூரம்பட்டி நான்கு ரோடு உட்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மின் தடை நீடித்தது. இரவு 8 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு 11 மணிக்குத்தான் வந்தது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
சென்னிமலை 42, பவானிசாகர் 34.6, வரட்டுப்பள்ளம் 17, ஈரோடு 15, அம்மாபேட்டை7, தாளவாடி 6, பவானி 5.4, சத்தியமங்கலம் 4, பெருந்துறை 2, கவுந்தப்பாடி 1.6.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனினும் அவ்வப்போது இரவு நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தியது. மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, ட்ரான்ஸ்பார்மர் வெடித்தும் மரக்கிளைகள் விழுந்தும் மின் தடை ஏற்பட்டது.
குறிப்பாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அங்கு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
முகாசிபிடாரியூர் தியாகி குமரன் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இரவு நேரம் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். விடிய,விடிய தூங்காமல் அவதி அடைந்தனர். ஒரு சிலர் வாளி மூலம் மழை தண்ணீர் வெளியேற்றினர். பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.
சூறாவளி காற்று காரணமாக அரச்சலூர் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதேப்போல் சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இருந்த டவர் சூறாவளி காற்றுக்கு சரிந்து கீழே சாலையில் விழுந்தது.
நல்லவேளையாக அந்த நேரத்தில் யாரும் வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மின் ஊழியர்கள் சரிந்த மின்கம்பங்களை மீண்டும் சீரமைத்து வருகின்றனர்.
இதேபோல் அந்தியூர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் சூறாவளி காற்றுடன் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தவிட்டுப்பாளையம் கரட்டுப்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தது.
இதேபோல் அந்தியூர் காலனி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்தது. தங்க பாளையம் பகுதியில் மரகிளை மின்கம்பம் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதேப்போல் தங்கபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்தடை ஏற்பட்டது. இதனால் ஈச்சபாறை, வேதகாரன் குட்டை, அந்தியூர் காலனி, போன்ற பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு 10 மணிக்குப் பிறகு மழை நின்றவுடன் தவிட்டுபாளையம் அந்தியூர் டவுன் பகுதிகளில் மின் ஊழியர்கள் மின்தடையை சரி செய்தனர்.
மேலும் ஈச்சபாளையம் உட்பட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு மின் வினியோகம் வந்தது. இதனால் விடிய, விடிய மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.
இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, டி.என்.பாளையம் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பகலில் கடும் வெயில் வாட்டிய நிலையில் இரவு, 7 மணிக்கு மேல் மேகமூட்டம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்று வீசியது. 7.50 மணிக்கு மேல் கடும் புழுதி காற்றுடன், மின்னல், இடியுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில், 8 மணிக்கு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் பஸ் நிலையம், சத்தி சாலை, வீரப்பன்சத்திரத்தில் ஒரு பகுதி, மூலப்பட்டறை, அகில்மேடு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பழனி மலை வீதி போன்ற இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு ரெயில்வே நிலையம் எதிரே, ஒரு மின் கம்பம் காற்றால் சாய்ந்து, மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, எஸ்.கே.சி., சாலை, சூரம்பட்டி நான்கு ரோடு உட்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மின் தடை நீடித்தது. இரவு 8 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு 11 மணிக்குத்தான் வந்தது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
சென்னிமலை 42, பவானிசாகர் 34.6, வரட்டுப்பள்ளம் 17, ஈரோடு 15, அம்மாபேட்டை7, தாளவாடி 6, பவானி 5.4, சத்தியமங்கலம் 4, பெருந்துறை 2, கவுந்தப்பாடி 1.6.