தமிழ்நாடு செய்திகள்
மருத்துவ முகாம் நடந்தது.

சீர்காழியில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-04-11 15:36 IST   |   Update On 2022-04-11 15:36:00 IST
சீர்காழியில் இருதயம், குடல் இரைப்பை, புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான இருதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சீர்காழி:

சீர்காழிச.மு.இ.மேல்நிலைப்பள்ளியில், சீர்காழி ரோட்டரி சங்கம், சென்னை பில்ராத் மருத்துவமனை, பரஞ்ஜோதி ஜூவல்லரி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் நித்யாதேவி பாலமுருகன் ஆகியோர்

இணைந்து பொதுமக்களுக்கான இருதயம், குடல் இரைப்பை, புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான இருதய நோய் ஆகிய சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர்

ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன், செல்வக்குமார், சுடர்.கல்யாணசுந்தரம்,

சாமி.செழியன், சோலை, சிவகுரு, வக்கீல்.சுந்தரய்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.குடல் இரைப்பை முகாமை தொடங்கி வைத்து பேசினார். இருதய பரிசோதனை

முகாமினை சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபர-மேஸ்வரி-ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.  முகாமில் பில்ராத் மருத்துவமனை இருதயம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்கள்

பங்கேற்று பொதுமக்களுக்கு ஈசிஜி, எக்கோ, பரிசோதனைகள் மற்றும் வயிறு, இருதய பிரச்சனைகளுக்கான பரிசோதனகளை மேற்கொண்டனர்.

பரிசோதனையில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்திட பரிந்துரை செய்தனர். அப்போது இருதய சிறப்பு மருத்துவர் மகாதேவன் பேசுகையில்,

மற்றவர்களுடன் நம்மையும், நமதுவாழ்வு, நமது உணவுபழக்கவழங்கங்களுடன் ஒப்பிட்டு அடுத்தவர்கள் போல் நாம் வசதியாக வாழவேண்டும் என நினைத்து மனஅழுத்தம் ஏற்படுவதால்தான்

ஹார்ட்அட்டாக் அதிகளவு வர வாய்ப்புள்ளது.அதிகபட்சம் இரவு 11மணியிலிருந்து காலை 5மணி வரையிலாவது உறங்கவேண்டும். இந்த உறக்கம் குறைவதால் தான் தற்போது இளம் வயதிலேயே

அதிகளவு ஹார்ட்அட்டாக் வருகிறது. முன்பு பசிக்கு சாப்பிட்டது போய், தற்போது எந்த கடையில் எந்த உணவு பிரதானம் என தெரிந்து அதனை தேடி சென்று சாப்பிடுவதும் இருதய பிரச்சனைக்கு

வழிவகுக்கிறது என்றார்.இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்-டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

ரோட்டரி செயலாளர் கணேஷ் மற்றும் நகரமன்ற துணை தலைவர் சுப்பராயன், பாஸ்கரன், ராஜசேகரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்

நித்யாதேவிபால-முருகன் வரவேற்றார். நிறைவில் முகாம் ஒருங்கி-ணைப்பாளர் பரஞ்ஜோதி.பழனியப்பன் நன்றி கூறினார்.

Similar News