தமிழ்நாடு
108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

சத்தியமங்கலம் அருகே இன்று 108 ஆம்புலன்சில் கூலித்தொழிலாளி மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published On 2022-04-04 05:33 GMT   |   Update On 2022-04-04 05:33 GMT
சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.நிலைமையை புரிந்துகொண்ட கடம்பூர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிவகாமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியான சிவகாமிக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதனை அடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் அங்கு வந்து சிவகாமியை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு பிரசவத்திற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.சிவகாமி கணவரும் உடனிருந்தார்.

ஆம்புலன்ஸ் கெம்பநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.நிலைமையை புரிந்துகொண்ட கடம்பூர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிவகாமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது சிவகாமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அஜித் குமார் மற்றும் வாகன ஓட்டுனர் அரப்புலி சாமியை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News