தமிழ்நாடு செய்திகள்
நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்த பசுமாடு இன்று அதிகாலை இறந்தது
படுகாயம் அடைந்த பசு மாடு இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தது. பிறந்து 19 நாட்களே ஆன கன்று குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.
டி.என்.பாளையம்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக கடந்த 7-வருடங்களாக பணியாற்றி வந்தார்.
ஆனால் அவர் தனது விரிவுரையாளர் பணியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு நாட்டு பசு மாடு, மூன்று கலப்பின பசு மாடுகள் உட்பட 4 மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் 3 பசு மாடுகள் சினையாக இருந்தது. இதில் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 19 நாட்களுக்கு முன்பு தான் கன்று ஒன்றை ஈன்றது. இந்த நிலையில் மதன் குமார் தனது குத்தகை தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து மாடு அலறும் சத்தம் கேட்டது.
இதையடுத்து மதன்குமார் அங்கு சென்று பார்த்தார். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து கன்று ஈன்ற கலப்பின பசு மாட்டின் வாய், தாடை மற்றும் நாக்கு கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.
இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரிய வந்தது.
நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட அந்த பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் அவதி அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர்.
பசு மாடு தனது இளங்கன்றுக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் தவித்தது. கன்று குட்டியும் அதை சுற்றி வந்து பார்த்து ஏக்கத்துடன் சென்றது. படுகாயம் அடைந்த பசு மாட்டை மதன்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அந்த மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்து கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை படுகாயம் அடைந்த பசு மாடு பரிதாபமாக இறந்தது. இதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து பிறந்து 19 நாட்களே ஆன கன்று குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இறந்த பசு மாட்டை சோகத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து பசு மாட்டை பிரேத பரிசோதனை செய்து அந்த பகுதிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக கடந்த 7-வருடங்களாக பணியாற்றி வந்தார்.
ஆனால் அவர் தனது விரிவுரையாளர் பணியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு நாட்டு பசு மாடு, மூன்று கலப்பின பசு மாடுகள் உட்பட 4 மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் 3 பசு மாடுகள் சினையாக இருந்தது. இதில் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 19 நாட்களுக்கு முன்பு தான் கன்று ஒன்றை ஈன்றது. இந்த நிலையில் மதன் குமார் தனது குத்தகை தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து மாடு அலறும் சத்தம் கேட்டது.
இதையடுத்து மதன்குமார் அங்கு சென்று பார்த்தார். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து கன்று ஈன்ற கலப்பின பசு மாட்டின் வாய், தாடை மற்றும் நாக்கு கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.
இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரிய வந்தது.
நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட அந்த பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் அவதி அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர்.
பசு மாடு தனது இளங்கன்றுக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் தவித்தது. கன்று குட்டியும் அதை சுற்றி வந்து பார்த்து ஏக்கத்துடன் சென்றது. படுகாயம் அடைந்த பசு மாட்டை மதன்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அந்த மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்து கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை படுகாயம் அடைந்த பசு மாடு பரிதாபமாக இறந்தது. இதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து பிறந்து 19 நாட்களே ஆன கன்று குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இறந்த பசு மாட்டை சோகத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து பசு மாட்டை பிரேத பரிசோதனை செய்து அந்த பகுதிலேயே அடக்கம் செய்யப்பட்டது.