தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் வீடு உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் முனியப்பன் கோவில் வீதியில் சிவானந்தம் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் 5-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
இதேபோல் ஈரோடு பண்ணை நகரில் உள்ள சிவானந்தத்தின் தம்பி செந்தில்நாதன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. இதேபோல் பாரி வீதியில் உள்ள உறவினர் வீடு, கணபதி நகரில் உள்ள உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பவானி, சித்தோடு உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகள் உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் முனியப்பன் கோவில் வீதியில் சிவானந்தம் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் 5-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
இதேபோல் ஈரோடு பண்ணை நகரில் உள்ள சிவானந்தத்தின் தம்பி செந்தில்நாதன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. இதேபோல் பாரி வீதியில் உள்ள உறவினர் வீடு, கணபதி நகரில் உள்ள உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பவானி, சித்தோடு உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகள் உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.