செய்திகள்
நீர்மட்டம் கிடுகிடு உயர்வு- பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் தண்ணீர் திறப்பு
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக நீர்மட்டம் உயர்நதுள்ளது. நேற்று நீர்மட்டம் 44.70 அடியாக இருந்தது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 957 கனஅடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1739 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 62 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் கூடுதலாக 450 கனஅடி தண்ணீரை வெள்ளியங்கால் ஓடை வழியாக திறந்து விட்டனர். இந்த மழை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் வீராணம் ஏரி 2-வது முறையாக நிரம்பி விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக நீர்மட்டம் உயர்நதுள்ளது. நேற்று நீர்மட்டம் 44.70 அடியாக இருந்தது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 957 கனஅடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1739 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 62 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் கூடுதலாக 450 கனஅடி தண்ணீரை வெள்ளியங்கால் ஓடை வழியாக திறந்து விட்டனர். இந்த மழை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் வீராணம் ஏரி 2-வது முறையாக நிரம்பி விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.