செய்திகள்
கொரோனா பரிசோதனை

மாமல்லபுரத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கணக்கெடுப்பு- அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

Published On 2021-05-26 14:55 IST   |   Update On 2021-05-26 14:55:00 IST
அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் மாமல்லபுரம் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட வருவாய்துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு பெண் சுற்றுலா பயணி பார்பரா (வயது80). கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதே போல் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலா பயணி லியோனல் குரூஸ் (90) என்பவரும் கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார்.

அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் மாமல்லபுரம் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட வருவாய்துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 9 வெளிநாட்டு பயணிகள் தங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து 9 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் நபர்களையும் பரிசோதணை செய்ய விசாரித்து வருகிறார்கள்.

Similar News