செய்திகள்
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இது தாம்பரம் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.