செய்திகள்
உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்து- உயிரிழப்பு 21 ஆக அதிகரிப்பு

Published On 2021-02-19 05:35 GMT   |   Update On 2021-02-19 05:35 GMT
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
சாத்தூர்:

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் 20 போ் உயிரிழந்தனர். காயமடைந்தோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பெண் தொழிலாளி வைஜெயந்தி மாலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 16 பேர் சாத்தூர், மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News