செய்திகள்
நடிகை கவுதமி

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினி முடிவு செய்ய வேண்டும்- நடிகை கவுதமி

Published On 2021-01-12 09:36 GMT   |   Update On 2021-01-12 09:36 GMT
பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் “நம்ம ஊரு பொங்கல்” நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு “நம்ம ஊரு பொங்கல்” நடைபெற்றது.

பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கூட்டணி என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தற்போது கருத்துக்கள் இல்லை.

யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு கிடையாது. தேர்தல் வரை எதையும் உறுதியாக சொல்லமுடியாது.

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக அமையவும், பொதுமக்களை சந்திக்கவும் நான் வந்துள்ளேன்

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நடிகை கவுதமி மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற கோலப்போட்டிகளை பார்வையிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
Tags:    

Similar News