செய்திகள்
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதுவை மக்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கருணையின் வடிவான ஏசுநாதர், மரியன்னையின் மகனாக இப்பூவுலகில் அவதரித்த அற்புத திருநாள் இந்த கிறிஸ்துமஸ் தினமாகும். அன்பின் மகத்துவத்தினை அகில உலகிற்கும் எடுத்துரைத்த ஏசுநாதர் மன்னிக்கும் குணத்தின் மகத்துவத்தையும் அறிய வைத்தார். எத்தனை இடர்கள் எதிர்ப்படினும் கொண்ட கொள்கையில் மாறாதிருக்கவேண்டும் என்பது ஏசுபிரானின் வாழ்க்கை நமக்களிக்கும் படமாகும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கருணையின் வடிவான ஏசுநாதர், மரியன்னையின் மகனாக இப்பூவுலகில் அவதரித்த அற்புத திருநாள் இந்த கிறிஸ்துமஸ் தினமாகும். அன்பின் மகத்துவத்தினை அகில உலகிற்கும் எடுத்துரைத்த ஏசுநாதர் மன்னிக்கும் குணத்தின் மகத்துவத்தையும் அறிய வைத்தார். எத்தனை இடர்கள் எதிர்ப்படினும் கொண்ட கொள்கையில் மாறாதிருக்கவேண்டும் என்பது ஏசுபிரானின் வாழ்க்கை நமக்களிக்கும் படமாகும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.