செய்திகள்
75 மூட்டை ரேஷன் அரிசி வேனில் கடத்தல்- டிரைவர் கைது
ரேஷன் அரிசியை வேனில் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் 75 மூட்டை அரிசியை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசாருக்கு சாத்தூர் வழியாக வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் முத்தால்நாயக்கன்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேனை மடக்கினார்கள். அந்த வேனில் சோதனை செய்த போது அதில் 75 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவர்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை (வயது 37) கைது செய்தனர். அந்த வேனில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசாருக்கு சாத்தூர் வழியாக வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் முத்தால்நாயக்கன்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேனை மடக்கினார்கள். அந்த வேனில் சோதனை செய்த போது அதில் 75 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவர்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை (வயது 37) கைது செய்தனர். அந்த வேனில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.