செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-12-13 12:10 IST   |   Update On 2020-12-13 12:10:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,492 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98.57 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 98,57,029 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 391 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,019 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,57,464 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,136 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,492ஆக உயர்ந்துள்ளது.

Similar News

வடம்- Movie Review