செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-12-03 06:11 GMT   |   Update On 2020-12-03 06:11 GMT
புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,119 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 95,34,965 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 526 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,648 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,73,373 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 40,726 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றும் புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,119ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News