செய்திகள்
கொலை

புதுச்சேரியில் காவல் நிலையம் எதிரில் இளைஞர் வெட்டிக்கொலை

Published On 2020-11-03 21:53 IST   |   Update On 2020-11-03 21:53:00 IST
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு காவல் நிலையத்திற்கு எதிரே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் அந்தத வாலிபர் உயிரிழந்தார்.

காவல் நிலையத்திற்கு எதிராகவே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News