செய்திகள்
பள்ளிகளில் கொரோனா கெடுபிடி அவசியம்- கவர்னர் அறிவுறுத்தல்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பு விதிகளை கெடுபிடியாக கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அப்போது அவர் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
நேற்று அவர் நடத்திய கலந்துரையாடலின்போது வழங்கிய ஆலோசனை வருமாறு: -
டாக்டர்கள் நாள்தோறும் தங்களது மறுஆய்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்புக்காக விதிகளை கெடுபிடியாக கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை கண்டிப்புடன் அமலாக்க வேண்டும். சண்டே மார்க்கெட் கூடும்போது சிலர் முகக்கவசம் அணிவதில்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கடற்கரை சாலையில் மருத்துவ பரிசோதனை குழு அமைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட ஆலோசனைகளை கவர்னர் கிரண்பேடி வழங்கினார்.