செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் கொரோனாவுக்கு எஸ்ஐ பலி

Published On 2020-10-08 10:09 IST   |   Update On 2020-10-08 10:09:00 IST
புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, மக்கள் பிரதிநிதிகளையும், பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை பலர் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சிலர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றிய சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.

Similar News