செய்திகள்
மாணவன் விக்னேஷ்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை

Published On 2020-09-09 07:13 GMT   |   Update On 2020-09-09 07:13 GMT
செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) தற்கொலை செய்து கொண்டார். செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News