செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-18 15:00 IST   |   Update On 2020-08-18 15:00:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 157 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,308 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,46,945 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,83,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,17,839 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 21,151 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,308 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 18,002 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News