செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செங்கல்பட்டில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-12 08:36 GMT   |   Update On 2020-08-12 08:36 GMT
செங்கல்பட்டில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,092 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,092 ஆக அதிகரித்துள்ளது.


Tags:    

Similar News