செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் இன்று மேலும் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-10 08:00 GMT   |   Update On 2020-08-10 08:00 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,232 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,232 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News