செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 245 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-04 13:08 GMT   |   Update On 2020-08-04 13:08 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 245 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,917 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,04,027ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 15,672 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,917 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 13,062 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 272 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News