செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செங்கல்பட்டில் இன்று மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-08-03 08:48 GMT   |   Update On 2020-08-03 08:48 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 15,612 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News