செய்திகள்
முழு கொள்ளளவை எட்டுகிறது வீராணம் ஏரி
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரும் நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் சிதம்பரம் வட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரும் நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் சிதம்பரம் வட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.