செய்திகள்
என்எல்சி விபத்து

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் -நெய்வேலியில் நாளை கடையடைப்பு

Published On 2020-07-02 16:01 IST   |   Update On 2020-07-02 16:01:00 IST
என்எல்சி பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடத்தப்படுகிறது.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடத்தப்படுகிறது. வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் கடைகளை அடைத்து, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளனர். மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Similar News