செய்திகள்
கவுசல்யா

சங்கர் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்- கவுசல்யா

Published On 2020-06-23 07:14 GMT   |   Update On 2020-06-23 07:46 GMT
சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்காக நான் உயிர் உள்ளவரை போராடுவேன் என்று கவுசல்யா கூறி உள்ளார்.
குன்னூர்:

உடுமலை சங்கரை காதலித்து திருமணம் செய்தவர் கவுசல்யா. சங்கரின் மரணத்துக்கு பிறகு கவுசல்யா, தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் நியாயம் இல்லை. ஏற்கனவே வழக்கை விசாரித்த துணை போலீஸ் சூப்பிரண்டை மாற்றி விட்டனர். எங்கள் தரப்புக்கு என தனியாக வக்கீல் வைக்க முடியவில்லை. அரசு வக்கீல் மூலமாகவே வழக்கை நடத்தி வந்தோம். சின்னசாமி குற்றவாளி இல்லை என்றால், சங்கர் உயிருடன் இருந்து, என்னுடன் வாழ்ந்திருக்க வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் டில் மேல்முறையீடு செய்வேன். எனது சட்ட போராட்டம் தொடரும். சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நான் உயிர் உள்ளவரை போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News