செய்திகள்
ஈரோடு சம்பத்நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு
ஈரோட்டில் நேற்று இந்த பகுதி முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு சம்பத்நகர் பகுதியில் 2½ வயது ஆண் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழந்தை தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறது. இதற்கிடையே சம்பத்நகரில் குறிப்பிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
நேற்று இந்த பகுதி முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீதியில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இதுபோல் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த பணிகளை ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பார்வையிட்டார்.
ஈரோடு சம்பத்நகர் பகுதியில் 2½ வயது ஆண் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழந்தை தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறது. இதற்கிடையே சம்பத்நகரில் குறிப்பிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
நேற்று இந்த பகுதி முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீதியில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இதுபோல் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த பணிகளை ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பார்வையிட்டார்.