செய்திகள்
விழுப்புரம்-புதுச்சேரி இடையே நடைபெறும் தண்டவாளம் சீரமைப்பு பணி

விழுப்புரம்-புதுச்சேரி இடையே தண்டவாளம் சீரமைப்பு

Published On 2020-06-04 12:04 IST   |   Update On 2020-06-04 12:04:00 IST
விழுப்புரம்-புதுச்சேரி இடையே தண்டவாளம் சீரமைப்பு மற்றும் பேக்கிங் எந்திரம் மூலம் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
புதுச்சேரி:

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல ஒரு சில சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே தண்டவாளம் சீரமைப்பு மற்றும் பேக்கிங் எந்திரம் மூலம் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் பயனின்றி கிடக்கும் தண்டவாளங்களை அகற்றும் பணியும் நடக்கிறது. ரெயில் போக்குவரத்து முழுமையாக தொடங்குவதற்குள் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News