செய்திகள்
தனிமைப்படுத்துதல்

தொல்லியல் துறையினர் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published On 2020-05-26 08:17 IST   |   Update On 2020-05-26 08:17:00 IST
சென்னையில் இருந்து அகழ்வாராய்ச்சிக்கு சென்ற தொல்லியல் துறையினர் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பல ஆண்டுகளாக தொல்லியல் துறையினரின் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே இதற்காக தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரும், பயிற்சியாளர்கள் 4 பேரும் என மொத்தம் 5 பேர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்னிமலைக்கு வந்தனர்.

அவர்கள் 5 பேருக்கும் சென்னிமலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதால், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர் 5 பேரையும் ஒரு தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். 

Similar News