செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 13-ஆக உயர்வு

Published On 2020-05-13 13:23 IST   |   Update On 2020-05-13 13:23:00 IST
புதுச்சேரியில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா தொற்று 12 பேருக்கு உறுதியான நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த 37 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. இதையடுத்து அந்த நபர், புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளனர். 

Similar News