செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் பலி
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் இன்று காலை உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ராஜவல்லி (வயது 35). இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளது.
இதற்காக டயாலசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறி கடந்த 30-ந் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள கொரோனா வார்டில் இவரது ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. அவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. என்றாலும் இவர் கொரோனா அச்சத்தில் இருந்தார். இன்று காலை ராஜவல்லி இறந்தார்.
இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ராஜவல்லியின் ரத்த பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபின்னர் தான் அவருக்கு கொரோனா இருந்ததா? என்பதை உறுதி செய்ய முடியும் என்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ராஜவல்லி (வயது 35). இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளது.
இதற்காக டயாலசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறி கடந்த 30-ந் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள கொரோனா வார்டில் இவரது ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. அவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. என்றாலும் இவர் கொரோனா அச்சத்தில் இருந்தார். இன்று காலை ராஜவல்லி இறந்தார்.
இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ராஜவல்லியின் ரத்த பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபின்னர் தான் அவருக்கு கொரோனா இருந்ததா? என்பதை உறுதி செய்ய முடியும் என்றனர்.