செய்திகள்
திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்
சற்று வினோதமாக ஒரு சிலர் பழமையையும், பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்போது அது பலரின் கவனத்தை ஈர்த்துவிடும்.
கடத்தூர் :
தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஆடம்பரம், சொகுசு காரில் ஊர்வலம், மின்விளக்கு அலங்காரம் போன்றவற்றுக்கு குறைவு இருக்காது. அதில் சற்று வினோதமாக ஒரு சிலர் பழமையையும், பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்போது அது பலரின் கவனத்தை ஈர்த்துவிடும்.
இதுபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்து உள்ளது. கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் சுபாசினி (வயது 23). இவர் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படித்து உள்ளார். இதேபோல் கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் பரணி பிரகாஷ் (25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பரணி பிரகாசுக்கும், சுபாசினிக்கும் கோபி அருகே உள்ள கருங்கரடு முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் கூகலூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக புறப்பட தயாராயினர். அப்போது மணமக்களை அழைத்து செல்ல மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டது. இதில் மணமக்கள் ஏறி உட்கார்ந்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருமண மண்டபத்துக்கு மணமக்கள் சென்றனர்.
மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வரும் வழியில் மணமக்கள் மாட்டு வண்டியை பார்த்ததும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ரோட்டுக்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வண்டியை நிறுத்தி மணமக்களுக்கு திருஷ்டி சுற்றி அங்கிருந்து வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் எங்களுக்கு புதிய அனுபவம் ஏற்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் இது ஆகிவிட்டது. விழாவையொட்டி மணப்பெண்ணின் குழந்தை பருவ புகைப்படங்களை ஒன்றிணைத்து தொகுப்பாக காட்சி படுத்தியிருந்ததும், திருமணத்துக்கு வந்தவர்களை வெகுவாக ஈர்த்தது,’ என்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஆடம்பரம், சொகுசு காரில் ஊர்வலம், மின்விளக்கு அலங்காரம் போன்றவற்றுக்கு குறைவு இருக்காது. அதில் சற்று வினோதமாக ஒரு சிலர் பழமையையும், பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்போது அது பலரின் கவனத்தை ஈர்த்துவிடும்.
இதுபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்து உள்ளது. கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் சுபாசினி (வயது 23). இவர் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படித்து உள்ளார். இதேபோல் கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் பரணி பிரகாஷ் (25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பரணி பிரகாசுக்கும், சுபாசினிக்கும் கோபி அருகே உள்ள கருங்கரடு முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் கூகலூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக புறப்பட தயாராயினர். அப்போது மணமக்களை அழைத்து செல்ல மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டது. இதில் மணமக்கள் ஏறி உட்கார்ந்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருமண மண்டபத்துக்கு மணமக்கள் சென்றனர்.
மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வரும் வழியில் மணமக்கள் மாட்டு வண்டியை பார்த்ததும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ரோட்டுக்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வண்டியை நிறுத்தி மணமக்களுக்கு திருஷ்டி சுற்றி அங்கிருந்து வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் எங்களுக்கு புதிய அனுபவம் ஏற்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் இது ஆகிவிட்டது. விழாவையொட்டி மணப்பெண்ணின் குழந்தை பருவ புகைப்படங்களை ஒன்றிணைத்து தொகுப்பாக காட்சி படுத்தியிருந்ததும், திருமணத்துக்கு வந்தவர்களை வெகுவாக ஈர்த்தது,’ என்றனர்.