செய்திகள்
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு- காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்
காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.
வேலூர்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் வகுப்புக்கு சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் வகுப்புக்கு சென்றனர்.