செய்திகள்
கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் நேற்று 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிரவில் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.
சத்தியமங்கலம்:
மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 120 அடி கொண்ட இந்த அணையில் 105 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியும்.
கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் 102 அடியை தாண்டியது.
இதனால் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிரவில் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று நள்ளிரவு முதல் அணை திறக்கப்பட்டது. அணைக்கு வரும் 2300 கனஅடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது உபரி நீர் திறப்பு குறைவாக இருந்தாலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 120 அடி கொண்ட இந்த அணையில் 105 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியும்.
கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் 102 அடியை தாண்டியது.
இதனால் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிரவில் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று நள்ளிரவு முதல் அணை திறக்கப்பட்டது. அணைக்கு வரும் 2300 கனஅடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது உபரி நீர் திறப்பு குறைவாக இருந்தாலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.