செய்திகள்
ஈரோடு ரெயில் நிலையம் முன் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

அயோத்தி வழக்கு தீர்ப்பு- ஈரோடு மாவட்டத்தில் 1700 போலீசார் பாதுகாப்பு

Published On 2019-11-09 04:19 GMT   |   Update On 2019-11-09 04:19 GMT
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 1700 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு:

பரபரப்பாக பேசப்பட்டு வரும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி நாடு முதுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய வழிப்பாட்டு தலங்கள் முன்பும் பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரெயில் நிலையம் உள்ளே போகும் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி மலம் சோதனை செயயப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் ஈரோடு ரெயில் நிலையம் வரும் ரெயில்களிலும் போலீசார் ஏறி தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஈரோடு ரெயில் நிலையம் பரபரப்பாக உள்ளது.

ஈரோடு, பெருந்துறை, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி, சிவகிரி, ப.புளியம்பட்டி, தாளவாடி என மாவட்டம் முழுவதும் 1700 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
Tags:    

Similar News