செய்திகள்
நெய்வேலி அருகே கோழிப்பண்ணையில் 5 வயது பெண் குழந்தை கொன்று புதைப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கோழிப்பண்ணையில் 5 வயது பெண் குழந்தை கொன்று புதைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ளது மேலக்குப்பம். இந்த பகுதியை சேர்ந்தவர் உக்காண்டி (வயது 46). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு அம்சவள்ளி (7), மீனா (5), கனகவள்ளி (3) ஆகிய 3 பெண்குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் கமலம். இவர் தனது வீட்டில் கோழிபண்ணை வைத்துள்ளார். இந்த கோழிபண்ணையில் உக்காண்டி, அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள வீட்டில் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியின் 2-வது மகள் மீனாவை திடீரென்று காணவில்லை. இதனால் கவலை அடைந்த ராஜேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கம் தேடிபார்த்தார். எங்கும் மீனாவை காணவில்லை.
அதனை தொடர்ந்து உக்காண்டி ஊ.மங்கலம் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். இதற்கிடையே இன்று காலையில் போலீசார் உக்காண்டி, ராஜேஸ்வரி வேலை பார்த்த கமலம் வீட்டிற்கு சென்றனர். பின்பு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாயமான சிறுமி மீனாவை நெய்வேலி அருகே உள்ள முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் அருகே உள்ள கோழிபண்ணையில் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசார் கமலத்தை அழைத்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுமி கொலைசெய்து புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் முதனை கிராம மக்களுக்கு தெரியவந்தது.
உடனே ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமி மீனாவை கொலை செய்து புதைத்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? அல்லது அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொன்று புதைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ளது மேலக்குப்பம். இந்த பகுதியை சேர்ந்தவர் உக்காண்டி (வயது 46). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு அம்சவள்ளி (7), மீனா (5), கனகவள்ளி (3) ஆகிய 3 பெண்குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் கமலம். இவர் தனது வீட்டில் கோழிபண்ணை வைத்துள்ளார். இந்த கோழிபண்ணையில் உக்காண்டி, அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள வீட்டில் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியின் 2-வது மகள் மீனாவை திடீரென்று காணவில்லை. இதனால் கவலை அடைந்த ராஜேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கம் தேடிபார்த்தார். எங்கும் மீனாவை காணவில்லை.
அதனை தொடர்ந்து உக்காண்டி ஊ.மங்கலம் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். இதற்கிடையே இன்று காலையில் போலீசார் உக்காண்டி, ராஜேஸ்வரி வேலை பார்த்த கமலம் வீட்டிற்கு சென்றனர். பின்பு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாயமான சிறுமி மீனாவை நெய்வேலி அருகே உள்ள முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் அருகே உள்ள கோழிபண்ணையில் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசார் கமலத்தை அழைத்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுமி கொலைசெய்து புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் முதனை கிராம மக்களுக்கு தெரியவந்தது.
உடனே ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமி மீனாவை கொலை செய்து புதைத்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? அல்லது அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொன்று புதைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.