செய்திகள்
46.72 அடியை எட்டிய நிலையில் கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரியை படத்தில் காணலாம்.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.72 அடியாக உயர்வு

Published On 2019-10-23 03:50 GMT   |   Update On 2019-10-23 06:12 GMT
வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை 46.72 அடியாக உயர்ந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பாக 44.50 அடியாக ஏரியின் நீர் இருப்பு குறைந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

அதே நேரத்தில், கீழணையில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. இன்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக 340 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.53 அடியாக இருந்தது. இன்று 46.72 அடியாக உயர்ந்தது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இன்று 54 கன அடிதண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு 19கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
Tags:    

Similar News